ETV Bharat / state

எம்ஜிஆர் என்னும் தாரக மந்திரம்!

author img

By

Published : Jan 17, 2022, 10:56 AM IST

Updated : Jan 17, 2022, 11:52 AM IST

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும் என அண்ணாவை மனதில் வைத்து எம்ஜிஆர் பாடியதாக சொல்வார்கள் ஆனால் இன்றும் எம்ஜிஆர் என்னும் மூன்றெழுத்து பட்டி தொட்டி எங்கும் பட்டொளி வீச பறந்து கொண்டிருக்கிறது.

MGR
MGR

திருச்சி : திமுகவின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர் எம்ஜிஆர் (MGR). பின்னாளில் திமுகவில் இருந்து தனிக்கட்சி கண்டார். அதற்கான விதை திருச்சியில் தூவப்பட்டது என்றால் அது மிகையாகாது.

எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்க முதன்முதலாக திருச்சியில்தான் ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் தொடங்கின, திமுகவின் அதே நிறத்தோடு கூடிய கொடியின் நடுவிலே தாமரையைப்பொறித்த கொடியை ஏற்றி கொண்டாடி மகிழ்ந்தனர் எம்ஜிஆரின் தொண்டர்கள்.

இந்த ஆர்வம் திருச்சியில் பட்டொளி வீசிப்பறந்த புதிய கொடி போல தமிழகம் எங்கும் பரவியது. 1972ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கினார் எம்ஜிஆர்., 1974ஆம் ஆண்டு தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டையும் திருச்சியில்தான் நடத்தினார்.

எம்ஜிஆர் அடிக்கடி கூறும் என் ரத்தத்தின் ரத்தங்களே என முழக்கத்தை திருச்சி முக்கியஸ்தர்கள் மத்தியில் இருந்துதான் தொடங்கினார். திருச்சியில் இருந்து முழக்கமிட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கே.சவுந்திரராஜன், ஆர். சவுந்திரராஜன், குழ.செல்லையா, பாப்பா சுந்தரம், முசிறி பித்தன் ஆகியோர், இவர்கள், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதுடன் சத்துணவு திட்டத்தை தொடங்கிய எம்ஜிஆர் தனது அமைச்சரவையில் ஆர். சவுந்திரராஜனை அமர்த்தி அழகு பார்த்தார்.

குழ. செல்லையாவிற்கும் பொறுப்பை கொடுத்தார். முசிறி பித்தன் கே. சவுந்திரராஜன் ஆகியோர் எம்.எல்.ஏக்கள் ஆக்கப்பட்டனர், திரைத்துறையை விட அரசியலில் தனக்கு திருப்புமுனை தந்த திருச்சியை இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என்று எவ்வளவோ போராடி கடைசிவரை முடியாமல் போனது.

எம்.ஜி.ஆர் திருச்சிக்கு வந்தால் தங்குவதற்காக அதிமுக சார்பில் அவருக்காக ஒரு பங்களா உறையூர் பகுதியில் ஒரு லட்சம் சதுர அடியில் வாங்கப்பட்டது. அது தற்போது பராமரிப்பு இல்லாமல் சிதைந்து கிடக்கிறது, ஆனாலும் இன்று வரை எம்.ஜி.ஆரின் பெயரையும் புகழையும் பரப்பிக்கொண்டுதான் இருக்கிறது.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும் என அண்ணாவை மனதில் வைத்து எம்ஜிஆர் பாடியதாக சொல்வார்கள், ஆனால் இன்றும் எம்ஜிஆர் என்னும் மூன்றெழுத்து பட்டி தொட்டி எங்கும் பட்டொளி வீச பறந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க : எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழாரம்

Last Updated :Jan 17, 2022, 11:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.