ETV Bharat / state

தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி.. ரூ.19,850 கோடியில் துவங்கி வைக்கும் திட்டப்பணிகள் என்னென்ன..?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 10:56 AM IST

Updated : Jan 2, 2024, 11:03 AM IST

Prime Minister Modi: திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளைத் துவங்கி வைப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி வந்துள்ளார். திருச்சியில் இன்று அவர் துவங்கி வைக்க உள்ள திட்டப்பணிகள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்...

Prime Minister Modi
Prime Minister Modi

திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) மத்திய அரசு நிதியில் ரூ.41 கோடி மதிப்பீட்டில் 253 அறைகளுடன் 4 மாடியில் கட்டப்பட்ட 506 மாணவர்கள் தங்குவதற்கான விடுதியை திறந்து வைக்க உள்ளார்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெடின் 488 கிலோ மீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் 697 கிலோ மீட்டர் நீளமுள்ள பெட்ரோலிய குழாய் திட்டம் ஆகிய இரு திட்டங்களைத் துவங்கி வைக்க உள்ளார்.

கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்ட விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சேலம் - மேக்னசைட் சந்திப்பு - ஓமலூர் - மேட்டூர் அணைப்பிரிவில் 41.4 கிலோமீட்டர் இரட்டை ரயில் பாதை திட்டம், மதுரை - தூத்துக்குடி இடையேயான 160 கி.மீ தூரத்துக்கு இரட்டை ரயில்பாதை அமைக்கும் திட்டம், திருச்சி - மானாமதுரை - விருதுநகர் ரயில்பாதை மின்மயமாக்கல் திட்டம், விருதுநகர் - தென்காசி சந்திப்பு மின்மயமாக்கல் திட்டம், செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - நெல்லை - திருச்செந்தூர் ரயில்பாதை மின்மயமாக்கல் ஆகிய திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதேபோல் தேசிய நெடுஞ்சாலை 81-இல் திருச்சி-கல்லகம் பிரிவில் 39 கி.மீ நான்குவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 81-இல் கல்லகம் - மீன்சுருட்டி பிரிவின் 60 கி.மீ நீளத்துக்கு 4 மற்றும் 2 வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 785-இல் செட்டிக்குளம் - நத்தம் பிரிவின் 29 கி.மீ நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 536-இல் காரைக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 80 கி.மீ இருவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 179ஏ-இல் சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் 44 கி.மீ நீள நான்குவழிச்சாலை ஆகியவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

காமராஜர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டோமொபைல் ஏற்றுமதி - இறக்குமதி முனையம்-2, துறைமுகம் அமைக்க தூர்வாரும் கட்டம்-5 ஆகியவற்றையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதேபோல் இந்திய எரிவாயு ஆணையத்தால் (கெயில்) கொச்சி - கூத்தநாடு - பெங்களூரு - மங்களூரு எரிவாயுக்குழாய் - 2 திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி முதல் கோவை வரை 323 கி.மீ இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்திற்கும், சென்னை வல்லூரில் தரைவழி முனையத்துக்கான பொதுவழித்தடத்தில் 'மல்டி புராடக்ட்' குழாய்கள் அமைக்கும் திட்டத்திற்கும பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

தேசிய நெடுஞ்சாலை 332ஏ-வில் முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கி.மீ நீளத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த சாலை மூலம் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள துறைமுகங்களையும், உலக பாரம்பரிய தலமான மாமல்லபுரத்துக்குக்கும், கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு சிறந்த போக்குவரத்து இணைப்பு ஏற்படும்.

பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 12 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 36 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: ஒரே மேடையில் மோடி, ஸ்டாலின், ஆர்.என்.ரவி! - திருச்சியில் பாதுகாப்பு தீவிரம்

Last Updated : Jan 2, 2024, 11:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.