ETV Bharat / state

லலிதா ஜுவல்லரியில் கொள்ளை: 12 கிலோகிராம் தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல்!

author img

By

Published : Oct 13, 2019, 11:53 AM IST

திருச்சி: லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 12 கிலோ கிராம் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

lalitha-jewelery-gold-and-diamond-jewelery-seized-at-trichy

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி பதின்மூன்று கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக திருவள்ளூரில் மணிகண்டன், கனகவல்லி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் வாகன சோதனையின்போது தப்பி ஓடிய கனகவல்லியின் மகன் சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த முருகன் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சரணடைந்தார். இதனை அடுத்து பெங்களூரு பொம்மனஹள்ளி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருடப்பட்ட நகைகளை பதுக்கி வைத்திருப்பதாக முருகன் தெரிவித்தார். இதையடுத்து, இரண்டு வாகனங்களில் குற்றவாளி முருகனுடன் சென்ற காவல்துறையினர், திருச்சி திருவெறும்பூர் கல்லணை பகுதிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் மண்ணில் புதைத்து வைத்திருந்த 11.5 கிலோகிராம் தங்க நகைகளைத் தோண்டி எடுத்தனர்.

திருச்சி
தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல்

பின்பு திருவெறும்பூரில் முருகன் தங்கியிருந்த வீடு பூட்டப்பட்டு இருந்ததால் முருகனை அழைத்துக்கொண்டு, பெரம்பலூர் வழியாக பெங்களூரு சென்று கொண்டிருந்தனர். இத்தகவலை அறிந்த திருச்சி துணை ஆணையர் மயில்வாகனன் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனிடம் தகவல் அளித்தார். பின்னர் அதன் பேரில் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த இரு வாகனங்களை தடுத்து நிறுத்தி விசாரித்ததில் பெங்களூரு போலீசார் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரோந்து காவல்துறையினருக்கும் பெங்களூரு காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையில் காவல்துறையினர், செங்கனூர் பகுதியில் பெங்களூரு போலீசாரை தடுத்து நிறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வாகனத்தில் முருகனை அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், திருச்சி மாநகர துணை ஆணையர் மயில்வாகனன், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், மற்றும் பெங்களூரு காவல்துறையினர் ஆகியோர் முருகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே முருகனிடம் இருந்து 11.317 கிராம் தங்க நகைகள், 541.67 கிராம் வைர நகைகள், 37.79 கிராம் பிளாட்டினம், 600 மில்லி கிராம் முத்துகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின் முக்கிய குற்றவாளி முருகனை கர்நாடகாவுக்கு அழைத்த்சென்றுள்ளனர்.

இதையும் படிக்க: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் அதிர்ச்சி வீடியோ !

Intro:திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையடிக்கப்பட்ட 12 கிலோ தங்க நகைகள் நகைகள் மற்றும் வைர நகைகள் பறிமுதல்


Body:திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லரி கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி மணியும் பதின்மூன்று கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது இது தொடர்பாக திருவாரூர் மணிகண்டன் கனகவல்லி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர் மேலும் வாகன சோதனையின்போது தப்பி ஓடிய கணவன் மகன் சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார் இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த முருகன் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சரணடைந்தனர் இதனை அடுத்து பெங்களூரு பொம்மனஹள்ளி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருடப்பட்ட நகைகளை பதுக்கி வைத்திருப்பதாக முருகன் தெரிவித்ததை அடுத்து இரண்டு வாகனங்களில் குற்றவாளி முருகனுடன் திருச்சி திருவெறும்பூர் கல்லணை பகுதிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் அங்கு மண்ணில் புதைத்து வைத்திருந்த 11.5 கிலோ தங்க நகைகளும் ஆராய்ச்சிகளையும் தோண்டி எடுத்தனர் பின்பு திருவரும்பூர் சென்று முருகன் தங்கியிருந்த வீடு பூட்டப்பட்டு இருந்ததால் முருகனை அழைத்துக்கொண்டு பெரம்பலூர் வழியாக பெங்களூர் சென்று கொண்டிருந்தனர் இத்தகவலை அறிந்த திருச்சி துணை ஆணையர் மயில்வாகனன் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தகவல் அளித்ததன் பேரில் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் ரோந்து பணி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியே வந்த இரு வாகனங்களை தடுத்து நிறுத்தி விசாரித்ததில் பெங்களூரு போலீசார் என தெரியவந்தது இதனை ரோந்து போலீசார் உடனே பெங்களூர் போலீசார் வாக்குவாதம் ஏற்பட்டது இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் செங்கனூர் பகுதியில் பெங்களூர் போலீசார் தடுத்து நிறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்திற்கு முருகனை அழைத்து வந்தனர் தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் திருச்சி மாநகர துணை ஆணையர் மயில்வாகனன் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆகியோர் பெங்களூர் போலீசார் மற்றும் முருகனிடம் விசாரணை மேற்கொண்டு கல்லறையில் தோண்டி எடுக்கப்பட்ட 12 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர் மேலும் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை பார்வையிட லலிதா ஜூவல்லரி மேலாளர் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பதை உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது


Conclusion:இதனிடையே முருகனிடம் இருந்து 11.3 1 7 கிராம் தங்க நகைகள 541 புள்ளி ஆறு 7 கிராம் வைர நகைகள் 37.7 9 பிளாட்டினம் 600 மில்லி கிராம் முத்துகள் ஆகியவற்றுடன் லலிதா ஜூவல்லரி முக்கிய குற்றவாளி முருகனை அழைத்து சென்று கர்நாடகா சென்றுள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.