ETV Bharat / state

சட்டவிரோத கட்டு சேவல் சண்டை : கண்டு கொள்ளாத காவல்துறை

author img

By

Published : Oct 27, 2022, 10:24 AM IST

திருச்சி அருகே தீபாவளி முதல் சட்ட விரோதமாக கட்டு சேவல் சண்டை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சட்டவிரோதமாக அரங்கேறிய கட்டு சேவல் சண்டை
சட்டவிரோதமாக அரங்கேறிய கட்டு சேவல் சண்டை

திருச்சி: புத்தாநத்தம் காவல்நிலையத்திற்குட்பட்ட பொத்தப்பட்டி அய்யர் குளத்தில் தீபாவளி முதல் சட்டவிரோதமாக வரும் கட்டு சேவல் சண்டை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்தக் காணொளியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் கட்டு சேவலோடு இருப்பது பதிவாகியுள்ளது.

திருச்சி அருகே தீபாவளி முதல் சட்ட விரோதமாக நடத்தப்பட்டு வரும் கட்டு சேவல் சண்டை, இது குறித்து கண்டு கொள்ளாத காவல்துறை

எட்டும் தூரத்தில் நடக்கும் இந்த சட்டவிரோத சேவல் சண்டையை காவல் அதிகாரிகள் எட்டி கூட பார்க்காதது வேடிக்கையாக உள்ளதாகவும், உயர்மட்ட அதிகாரிகளாவது இது குறித்து நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

இதையும் படிங்க: மழைநீர் வடிகால் பணி: விபத்துகளை தடுக்க பச்சை நிற வலை அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.