ETV Bharat / state

மோடியால் வந்த தகராறு - திமுக கவுன்சிலரை கைது செய்யக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Apr 21, 2022, 6:40 PM IST

திருச்சியில் நியாய விலைக்கடையில் மோடி புகைப்படத்தை வைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக திமுக கவுன்சிலரை கைது செய்யக்கோரி பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திமுக கவுன்சிலரை கைது செய்ய கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
திமுக கவுன்சிலரை கைது செய்ய கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

திருச்சி: பொன்நகர் பகுதியிலுள்ள நியாய விலைக் கடை எண் 2-ல் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க பாரதிய ஜனதா கட்சி கண்டோன்மென்ட் மண்டல் தலைவர் பரமசிவம் வந்தார். அப்போது அங்கிருந்த திமுகவினர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பாஜகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் மோடியின் படத்தை சாக்கடையில் வீசியதால் இரு தரப்பினருமே அடித்துக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்டோன்மென்ட் சரக காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும், பாஜக தலைவரை மாநகராட்சி 22ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ராமதாஸ் தாக்கியதாக பாஜக மாவட்டத்தலைவர் ராஜசேகரன் கன்டோன்மென்ட் சரக காவல் உதவி ஆணையரிடம் மனு அளித்தார்.

இந்நிலையில் திமுக கவுன்சிலரை கைது செய்யக்கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அனுமதி மறுத்த காவல் துறையினர் பாஜகவினரை அங்கிருந்து கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதற்கு மறுப்பு தெரிவித்த பாஜகவினர் காவல் துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திமுக கவுன்சிலரை கைது செய்யக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

இதனையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்டத்தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை வலுக்கட்டாயமாக காவல் துறையினர் கைது செய்தனர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சசிகலாவிடம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.