ETV Bharat / state

முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய அன்பில் மகேஷ்!

author img

By

Published : Feb 6, 2022, 10:04 PM IST

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது முதற்கட்ட பரப்புரையை இன்று (ஜன.6) தொடங்கினார்.

திமுக தொண்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அன்பில் மகேஷ் தொடர்பான காணொலி
திமுக தொண்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அன்பில் மகேஷ் தொடர்பான காணொலி

திருச்சி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி கடந்த 28ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் (பிப்.4) வரை நடைபெற்றது.

பின்னர் நேற்று (பிப்.5) வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டனர். நாளைய தினமே (பிப். 7) வேட்புமனுக்களைத் திரும்ப பெற கடைசி நாளாகும்.

தேர்தல் முடிவுற்ற பின்னர் பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அன்பில் மகேஷ் தொடர்பான காணொலி

இந்நிலையில் அரியமங்கலத்தில் திருச்சி மாநகராட்சியின் 16ஆவது வார்டு திமுக வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து, திமுக தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக வேட்பாளர் மதிவாணனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

இதையும் படிங்க: லதா மங்கேஷ்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சச்சின், ஷாருக்கான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.