ETV Bharat / state

தண்ணீர் கேட்பதுபோல் நடித்து செயின் பறிப்பு: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

author img

By

Published : Jan 30, 2020, 11:41 AM IST

திருச்சி: புத்தூர் அருகே தாகத்திற்குத் தண்ணீர் கேட்பதுபோல் நடித்து, 10 சவரன் செயின் பறித்த இளைஞருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இளைஞருக்கு 7ஆண்டு சிறை
இளைஞருக்கு 7ஆண்டு சிறை

திருச்சி புத்தூர் கனரா வங்கி காலனியைச் சேர்ந்தவர் சுபா (40). 2014ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் தேதி வீட்டின் முன்பு சுபா நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர், தனக்குத் தாகமாக உள்ளதாகக் கூறி குடிக்க தண்ணீர் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இதையடுத்து சுபா வீட்டிற்குள் சென்று சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து அந்த இளைஞரிடம் கொடுத்துள்ளார். தண்ணீரைக் குடித்த இளைஞர் சொம்பை திருப்பிக் கொடுப்பதுபோல் கொடுத்து, திடீரென சுபாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். பின்னர், தான் மறைத்துவைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி சுபா கழுத்திலிருந்த 10 சவரன் செயினை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உறையூர் காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்து கரூர் அருகே சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் (28) என்ற இளைஞரைக் கைதுசெய்தனர். அதன் பிறகு அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

செயின் பறித்த இளைஞர்
செயின் பறித்த இளைஞர்

இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி கிருபாகரன் வழக்கை விசாரித்தார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து ராஜேஷ் குமாருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் நகைக் கொள்ளை!

Intro:10 பவுன் செயின் பறித்த இளைஞருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுBody:திருச்சி:
10 பவுன் செயின் பறித்த இளைஞருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி புத்தூர், கனரா வங்கி காலனியைச் சேர்ந்தவர் சுபா (40). கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி வீட்டின் முன்பு சுபா நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர் தண்ணீர் குடிக்க கேட்டார்.
இதையடுத்து சுபா வீட்டிற்கு உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்து வாசலில் நின்ற இளைஞரிடம் கொடுத்தார். தண்ணீரை வாங்கிக் குடித்த அந்த இளைஞர் சொம்பை திருப்பி தருவது போல் கொடுத்து, திடீரென சுபாவை கீழே தள்ளி கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த 10 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை, சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் (28) என்ற இளைஞர் தான் இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ராஜேஷ் குமாரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி கிருபாகரன் வழக்கை விசாரித்தார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் ராஜேஷ் குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து ராஜேஷ்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.