ETV Bharat / state

ராதாபுரம் தொகுதிக்கு மறுவாக்கு எண்ணிக்கை - நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Oct 1, 2019, 3:07 PM IST

Updated : Oct 1, 2019, 4:58 PM IST

சென்னை: ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த தேர்தல் வழக்கில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

hc

2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடந்த பொதுத் தேர்தலின் போது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை 69,590 வாக்குகளும், திமுக வேட்பாளர் அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்று 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக இன்பதுரை அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து, அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது 203 தபால் வாக்குகளை தேர்தல் அலுவலர்கள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.

இந்த தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று வழங்கிய தீர்ப்பில், ராதாபுரம் தொகுதி தேர்தலில் நடத்தப்பட்ட 19, 20, 21 ஆகிய சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளையும் முறையே மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், ராதாபுரம் தொகுதியில் பதிவான மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அக்டோபர் 4ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் சார்பில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த 4 அலுவலர்கள் மனுதாரர் அப்பாவு மற்றும் எதிர்மனுதாரர் இன்பதுரை சார்பாகவும் ஒருவரை நியமிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Intro:Body:ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த தேர்தல் வழக்கில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்கு நடந்த பொதுத் தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை 69,590 ஓட்டுகளும், தி.மு.க. வேட்பாளர் அப்பாவு 69,541 ஓட்டுகளும் பெற்று 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக இன்பதுரை அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.

இந்த தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், ராதாபுரம் தொகுதி தேர்தலில் நடத்தப்பட்ட 19,20,21 ஆகிய சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளையும் முறையே மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், ராதாபுரம் தொகுதியில் பதிவான மின்னனு வாக்கு பதிவு எந்திரங்களை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அக்டோபர் 4 ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் சார்பில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த 4 அதிகாரிகளும், மனுதாரர் அப்பாவு மற்றும் எதிர்மனுதாரர் இன்பதுரை சார்பாகவும் ஒருவரை நியமிக்கலாம் என உத்தரவிட்ட வழக்கை ஒத்திவைத்தார்.
Conclusion:
Last Updated :Oct 1, 2019, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.