ETV Bharat / state

பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து!

author img

By

Published : Oct 5, 2020, 7:51 PM IST

விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Fire works accident
பட்டாசு தொழிற்சாலை விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கங்கர்செவல் கிராமம் தாயில் பட்டியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் பதினைந்திற்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.

இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்டோர் சரவெடி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (அக்.,5) வழக்கம் போல் சரவெடி வளையத்தை வெயிலில் உலர்த்தும் போது உராய்வினால் விபத்து ஏற்பட்டது.

எதிர்பாராத இந்த வெடிவிபத்தில் கீழசெவல்பட்டி சேர்ந்த பிச்சைக்கனி மகன் ரஞ்சித் (22) என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை சிவகாசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் முழு மூச்சாகப் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் காவல் துறையினர் பட்டாசு ஆலையை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.