இஸ்லாமியர்கள் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாது நபி விழாவாகக் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் நேற்று திருப்பூரில் மிலாது குழுவின் சார்பில் நபிகள் புகழ்பாடும் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை திருப்பூர் வட்டார ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் ஜபாருல்லா பிரார்த்தனை செய்தும், பெரிய பள்ளிவாசலின் தலைவர் இப்ராஹிம் சாஹிப் கொடி அசைத்தும் சமாதான புறாவை பறக்கவிட்டு தொடங்கிவைத்தனர். பேரணியில் திருப்பூர் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகளின் ஊர்வலமாகச் சென்றனர்.
பேரணியில் கலந்துகொண்ட சிறுவர் சிறுமியர், 'அனைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேண வேண்டும், அமைதியை காக்க வேண்டும்' உள்ளிட்ட கோஷங்களை எழுப்பிக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மிலாது குழுவின் தலைவர் சையது மன்சூர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: 'இஸ்லாமியர்களுக்கு அதிமுக துணை நிற்கும்' - அமைச்சர் பாண்டியராஜன் உறுதி!