ETV Bharat / state

திருப்பத்தூரில் ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு.

author img

By

Published : May 28, 2021, 7:20 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடியில், தண்டவாளத்தில் நடந்து சென்ற இளைஞர் மீது ரயில் மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

இளைஞர் உயிரிழப்பு
இளைஞர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஜீத் (25). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார்.

கரோனா தொற்றுத் தடுப்பு ஊரடங்கு காரணமாக, சொந்த ஊரான வாணியம்பாடிக்குச் அஜித் வந்துள்ளார்.

இன்று (மே.27) அவருடைய வீட்டிற்கருகே உள்ள ரயில் தண்டவாளம் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.

அப்போது தன்னுடைய செல்போனில், இயர் போன் மூலமாக பாடல் கேட்டவாறு தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார்.

இந்தநிலையில், சென்னையிலிருந்து கோவை நோக்கிச் சென்ற விரைவு ரயில் அந்த இளைஞர் மீது மோதியதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடற்கூராயுவுக்காக, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.