தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவருவதால் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சிவனருள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. "எதிர்வரும் காலங்களில் வாக்காளர் அடையாள அட்டை சம்பந்தமாக எவ்வித பிரச்னையும் இருக்காது; அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டை உரிய முறையில் வழங்கப்படும்" என்று மாவட்ட ஆட்சியர் சிவனருள் தகவல் தெரிவித்தார்.
மேலும் வாக்காளர் சேர்க்கை முகாமில் பட்டியலில் பெயர் சேர்த்தாலும், நீக்கினாலும், திருத்தம் செய்தாலும் அந்த விவரம் குறித்து முகாம் அலுவலக வெளியில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படும் என்று கூறினார். இந்தக் கூட்டத்தில் சார் ஆட்சியர் வந்தனா கார்க், உதவி ஆட்சியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.