ETV Bharat / state

கத்தியுடன் வழிப்பறி செய்த 4 இளைஞர்கள் கைது

author img

By

Published : Mar 28, 2022, 9:09 AM IST

வாணியம்பாடியில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நான்கு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கையில் கத்தியுடன் வழிப்பறி
கையில் கத்தியுடன் வழிப்பறி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த ஆகிப் உபேத் (20) தனது நண்பருடன் பார்க்கச் ஊசி தோப்பு பகுதிக்கு நேற்றிரவு (மார்ச் 27) இருசக்கர வாகனத்தில் சென்றார். இடையில் சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, வாகனத்தில் வைத்திருந்த செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனிடையே ஊசி தோப்பு பகுதியில் ரோந்து பணியில் சென்ற காவலர்கள் சந்தேகத்திற்கிடமாக நான்கு இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், நான்கு பேரும் பெருமாள்பேட்டை, நேதாஜி நகர், இந்திரா நகர், உமர் நகர் பகுதிகளைச் சேர்ந்த தேவமூர்த்தி (20), சுதாகர் (20), லோகேஷ்வர் ராவ் (23), பிரசாந்த் (24) என்பது தெரியவந்தது. அத்துடன் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்தது தெரியவந்தது. குறிப்பாக, ஆகிப் உபேத் செல்போன் திருட்டிலும் இவர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: போலீசாருக்கு சவால் விட்ட போதை ஆசாமி கைது...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.