ETV Bharat / state

குடியிருப்பு பகுதியில் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு!

author img

By

Published : Nov 29, 2022, 9:59 PM IST

ஆம்பூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறை வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

குடியிருப்பு பகுதியில் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு!
குடியிருப்பு பகுதியில் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு!

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று மாலை சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. உடனடியாக இதனை கண்ட அப்பகுதிமக்கள் இதுகுறித்து ஆம்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை பிடித்து வனப்பகுதியிற்க்குள் விட்டனர்.

இதையும் படிங்க: முஸ்லீம்னா தீவிரவாதியா? - பேராசிரியரிடம் கேள்வி எழுப்பிய மாணவன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.