ETV Bharat / state

முதியவர்களுக்கு முகக் கவசம் வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்

author img

By

Published : Apr 1, 2020, 7:35 AM IST

திருப்பத்தூர்: மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முதியவர்களுக்கு முகக் கவசம் பல்வேறு வகையான பழங்கள் 75 கிலோ அரிசி ஆகியவற்றை வழங்கினார்.

முதியவர்களுக்கு முகக் கவசம் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
முதியவர்களுக்கு முகக் கவசம் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தமிழ்நாட்டில் கடந்த ஏழு நாட்களாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது. திருப்பத்தூர் அடுத்த சி.கே ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் 13 முதியவர்கள் உள்ளனர்.

முதியவர்களுக்கு முகக் கவசம் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இந்நிலையில் அவர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் கிராமிய காவல் ஆய்வாளர் மதனலோகன், சமூக ஆர்வலர் பண்பு ஆகியோர் இணைந்து முதியவர்களுக்கு முகக் கவசம் பல வகையான பழங்கள் 25 கிலோ எடையுள்ள மூன்று மூட்டை அரிசி ஆகியவற்றை வழங்கினார்கள்.

இதையும் படிங்க: 'டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தாமாக முன்வர வேண்டும்' - தமிழ்நாடு அரசு வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.