திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி சார்பில் வருகின்ற தேர்தலில் பொதுமக்கள் 100 விழுக்காடு வாக்குகள் நேர்மையுடனும் கடமையுணர்வுடன் வாக்களிக்க வலியுறுத்தி நகராட்சி ஆணையாளர் செளந்தரராஜன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினார்கள்.
பூக்கடை பஜார் பகுதியில் இருந்து நேதாஜி சாலை, கிருஷ்ணாபுரம், தேசிய நெடுஞ்சாலை வழியாக பேருந்து நிலையம்வரை ஊர்வலமாகச் சென்று பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை பிரிவு நல அலுவலர் சதீஷ்குமார், வட்டாட்சியர் பத்மநாபன், காவல் துறை துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம், தூய்மை அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: வெயில் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன? இயக்குநர் வசந்தபாலன் பேட்டி