ETV Bharat / state

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிசேகம் - பக்தர்கள் பங்கேற்பு

author img

By

Published : Jan 21, 2023, 3:56 PM IST

தை அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

Etv Bharat திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிசேகம்
Etv Bharat திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிசேகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிஅஸ்திரதேவருக்கு சிறப்பு அபிசேகம்

தூத்துக்குடி: தை அமாவாசை தினத்தை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். தை, ஆடி அம்மாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் ஆண்டு முழுவதும் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்துவருகிறது.

அந்த வகையில் சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு எள், அன்னம், தர்ப்பபுள் வைத்து பிண்டம் வளர்த்து வேத மந்திரங்களை முழங்கி தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 04-30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத்தொடரந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: கடையநல்லூர் அருகே களைகட்டிய பூக்குழி திருவிழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.