ETV Bharat / state

கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்றத்தலைவர் வெட்டிப்படுகொலை

author img

By

Published : Aug 22, 2022, 8:11 PM IST

கோவில்பட்டி திட்டங்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை
கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் பொன்ராஜ்(63). இவர் தெற்குத் திட்டங்குளம் காலனி பகுதியில் உள்ள பண்ணைத்தோட்டத்தில் இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பொன்ராஜை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.

தகவல் அறிந்த கிராம மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சடலத்தைக்கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உறவினர்கள், பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை... பதறவைக்கும் வீடியோ...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.