ETV Bharat / state

'சாலையில் நின்று பேசியது குற்றமா?' - தூத்துக்குடியில் மூவருக்கு நடந்த அரிவாள்வெட்டு!

author img

By

Published : Sep 24, 2019, 8:22 AM IST

தூத்துக்குடி : செய்துங்கநல்லூர் அருகே உள்ள சேரகுளத்தில் மூன்று பேர் பேசிக்கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார்.

நடுரோட்டில் வைத்து மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள இராமானுஜம்புதூர் பஜாரில் சங்கரநாராயணன்(50), ஆயிரம்(50), பூவலிங்கம் ஆகிய மூவரும் நின்று பேசி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இருச்சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் மூன்று பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில், பலத்த காயமடைந்த மூவரையும் அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்பு, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேரகுளம் காவல் துறையினர், அருகில் உள்ள வணிக நிறுவனங்கள் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால், சம்பவம் குறித்த எந்த விபரமும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : டிக்கெட் கேட்ட நடத்துநருக்கு அரிவாள் வெட்டு

Intro:செய்துங்கநல்லூர் அருகே உள்ள சேர குளத்தில் மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு
Body:
தூத்துக்குடி


தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள இராமானுஜம்புதூர் பஜாரில் அதேஊரை சேர்ந்த சங்கரநாராயணன்(50), ஆயிரம்(50), பூவலிங்கம் ஆகிய மூவரும் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இருச்சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார்.
இதில் பலத்த காயமடைந்த மூவரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேரகுளம் போலீசார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் அருகில் உள்ள வணிக நிறுவனங்கள் இருக்கும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். ஆனால் மர்மநபர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சேரகுளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த ஊருக்கு அருகிலேயே தான் கல்லூரி மாணவர் ஒருவரும் காலையில் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் மாலையில் மீண்டும் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் ஊர்வாசிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.