ETV Bharat / state

வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞர் தற்கொலை!

author img

By

Published : Jul 20, 2022, 9:29 AM IST

திருவாரூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில், பட்டதாரி இளைஞர் ஒருவர் தற்கொலையால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் தற்கொலை!
இளைஞர் தற்கொலை!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கீழ உத்தரங்குடி பகுதியை சேர்ந்த வீரமணி என்பவரின் மகன் சுரேஷ்குமார் (35). முதுகலை பட்டம் பெற்றுள்ள இவருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிய நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளன.

சுரேஷ்குமார், ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணியாற்றி வந்தார். ஆனால், தற்போது வேலை இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என மன உளைச்சலில் அக்கம் பக்கத்தினரிடம் புலம்பி வந்தார் என கூறப்படுகிறது.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

இதைத்தொடர்ந்து, குடவாசல் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் சுரேஷ்குமார் நேற்று (ஜுலை 19) தற்கொலையால் உயிரிழந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் குடவாசல் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நீதிபதியின் கண்முன்னே போலி மதபோதகரை அரிவாளால் வெட்ட பாய்ந்த நபர் - காவல்துறை தீவிர விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.