ETV Bharat / state

இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும் - பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை!

author img

By

Published : Dec 30, 2019, 11:31 PM IST

திருவாரூர்: விவசாயத்திற்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரத்தை ரத்துசெய்து அதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை வைத்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்று பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பி ஆர் பாண்டியன்  தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்  நம்மாழ்வார் நினைவு நாள்  p r pandian news  p r pandiyan said that If free electricity is canceled, the aggrieved farmers will be mobilized  திருவாரூர் மாவட்டச் செய்திகள்  thiruvarur district news
இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும்- பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை

இயற்கை வேளாண் அறிவியல் அறிஞர் நம்மாழ்வார் நினைவு தின நிகழ்ச்சி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் பங்கேற்று நம்மாழ்வார் திருவுருப்படத்திற்கு மலர்த்தூவி புகழஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவும் நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்வதின் அவசியத்தை வலியுறுத்தியும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து செயல்பட்ட நம்மாழ்வாரின் கொள்கைகள் தற்போது மக்கள் இயக்கமாக மாறிவருகிறது.

பாரம்பரிய விவசாய முறைகளை பெரும்பாலான விவசாயிகள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். அவரது சேவையை அங்கீகரிக்கும்விதமாக தஞ்சாவூரில் நம்மாழ்வருக்கு மணிமண்டபம் அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் இணைந்து வானகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆராய்சி மையத்தை தேசிய அளவிலான ஆராய்சி மையமாக மாற்ற வேண்டும்.

இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும்- பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை

நம்மாழ்வாரின் கனவை நனவாக்கும் வகையில் இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை கொள்முதல் செய்வதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு மாநில அரசை நிர்பந்தம் செய்துவருகிறது.

தற்போது தட்கல் திட்டத்தில் வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கு மின் மீட்டர் பொருத்தப்பட்டுவருகிறது. எனவே, எந்த நேரத்திலும் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு தனது கொள்கை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்.

இலவச மின்சாரம் ரத்துசெய்யப்பட்டால் விவசாய உற்பத்தி அடியோடு அழியும். இலவச மின்சாரம் ரத்துசெய்யப்பட்டால் பாதிக்கப்படும் விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்" என்றார்.

இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரிக்கை!

Intro:Body:
தமிழக அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் விவசாய உற்பத்தி அடியோடு அழியும். பாதிக்கப்படும் விவசாயிகளை ஒன்றுப்படுத்தி தீவிரமான போராட்டத்தில் களமிறங்குவோம் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தின நிகழ்ச்சி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் பங்கேற்று நம்மாழ்வார் படத்திற்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..

தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவும், நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்வதின் மூலம் நோயற்ற வாழ்வின் அவசியத்தை வலியுறுத்தி தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பனித்துக் கொண்டு செயல்பட்டவர் நம்மாழ்வார் ஆவார். அவரது கொள்கைகள் இன்று மக்கள் இயக்கமாக மாறி உள்ளது. பாரம்பரிய விவசாய முறைகளை பெரும்பாலான விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர். அவரது சேவையை அங்கீகரிக்கும் வகையில் தஞ்சாவூரில் நம்மாழ்வார்க்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு முன் வரவேண்டும். தமிழக அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் இணைந்து வானகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆராய்ச்சி மையத்தை தேசிய அளவிலான ஆராய்ச்சி மையமாக தமிழக அரசு உருவாக்க வேண்டும். அவர் கனவை நினைவாக்கும் வகையில் இயற்கை உணவை கொள்முதல் செய்வதற்கான உரிய நடவடிக்கையை உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும்.

தமிழகத்தில் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு நிர்ப்பந்தம் செய்து வருவதாகவும், அதற்கேற்ப மின் மோட்டார்களில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு மின்சார வாரியம் கண்காணித்து வருகிற அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது. மேலும் தற்போது தட்கல் திட்டத்தில் வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கு மின் மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. எனவே எந்நேரத்திலும் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு தனது கொள்கை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும். இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் விவசாய உற்பத்தி அடியோடு அழியும். பாதிக்கப்படும் விவசாயிகளை ஒன்றுப்படுத்தி தீவிரமான போராட்டத்தில் களமிரங்குவோம் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.