ETV Bharat / state

இதே நிலை நீடித்தால், ரேஷன் கடைகளில் வெங்காயம் வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ்

author img

By

Published : Oct 23, 2020, 3:21 PM IST

திருவாரூர்: வெங்காய விலையேற்றம் தொடரும் பட்சத்தில் தேவைப்பட்டால் ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

kamaraj
kamaraj

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வெங்காயம் விலை தற்காலிக விலை ஏற்றம் தான். வெங்காயம் எடுக்கும் நேரத்தில் அதிக மழை பெய்து வருவதால் அறுவடை செய்ய முடியாமல் இருக்கிறார்கள். இந்த நிலை தொடரும் பட்சத்தில் தேவைப்பட்டால் ரேஷன் கடையில் வெங்காயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேஷன் கடைகளில் வெங்காயம் வழங்கப்படும்

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை, பயோமெட்ரிக் முறையில் அவ்வப்போது ஏற்படும் சர்வர் பிரச்னைகளை சரி செய்த பிறகு படிப்படியாக பிரச்னைகள் தீரும் வரை மக்கள் பொருள்களை பழைய முறையிலேயே பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.

இதையும் படிங்க: நலிந்த பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டிற்காக காத்திருக்கிறாரா ஆளுநர் ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.