ETV Bharat / state

சென்னையில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - தேவாலயத்தில் உடலை வைத்து தாய் போராட்டம்!

author img

By

Published : Jan 2, 2022, 7:33 AM IST

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நஷ்டஈடு வழங்கக் கோரி குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்
நஷ்டஈடு வழங்கக் கோரி குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோக். இவரது மகன் துரைப்பாண்டியன் (22) இவர் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூரில் தங்கி, தனது அம்மாவுடன் கூலி வேலை செய்து வந்தார். இதில் அம்மாவும் மகனும் அஸ்தினாபுரம் அடுத்த கண்டியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் வழிபாட்டுக்குச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக இருவரும் கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் சென்று தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதில் புத்தாண்டு தினத்தை வரவேற்கும் விதத்தில் இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு வரை பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. இதில் ஆராதனை முடிந்ததும் துரைப்பாண்டியன் தேவாலயத்தை விட்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த இரும்பு கம்பியை பிடித்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

இது குறித்த புகாரின் பேரில் காயார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உடற்கூராய்வு செய்யப்பட்ட அவரது சடலத்தை கொண்டு வந்த உறவினர்கள் தேவாலயத்தின் வாசலில் வைத்துவிட்டு உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையான அஸ்தினாபுரம் என்ற இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நஷ்டஈடு வழங்கக் கோரி குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்
நஷ்டஈடு வழங்கக் கோரி குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் காவல் ஆய்வாளர் லில்லி உள்ளிட்ட காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பனிமூட்டம் காரணமாக லாரி மீது கார் மோதியதில் ஓட்டுநர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.