ETV Bharat / state

Pradosham: அண்ணாமலையார் கோயில் நந்திக்கு மார்கழி பிரதோஷ சிறப்பு அபிஷேகம்!

author img

By

Published : Jan 5, 2023, 7:26 AM IST

மார்கழி மாத மகா பிரதோஷ தினத்தையொட்டி உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்தி சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

Etv Bharatஅண்ணாமலையார் கோவில் நந்தி சிலைக்கு மார்கழி பிரதோஷ சிறப்பு அபிஷேகம்
Etv Bharatஅண்ணாமலையார் கோவில் நந்தி சிலைக்கு மார்கழி பிரதோஷ சிறப்பு அபிஷேகம்

அண்ணாமலையார் கோவில் நந்தி சிலைக்கு மார்கழி பிரதோஷ சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை: பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தி சிலைக்கு மார்கழி மாத மகா பிரதோஷ விழாவையொட்டி நேற்று (ஜன.4) மாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பொளர்ணமி மற்றும் அமாவாசை வரும் இரண்டு தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு மகா பிரேதோஷம் நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் நேற்று மார்கழி மாத பிரதோஷத்தையொட்டி மாலை 4.30 மணியளவில் பெரிய நந்தி சிலைக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நந்திக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது. பிரதோஷ தினத்தில் நந்தியை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

நேற்று நடைபெற்ற மார்கழி மாத பிரதோஷ விழாவில் திருவண்ணாமலை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சிறப்பு அபிஷேகத்தை நேரில் கண்டு வழிபட்டனர்.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: ஜன.5 இன்றைய ராசிபலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.