ETV Bharat / state

‘அரசியலை வியாபாரமாக்கும் அமெரிக்கா’ - கிராம சபைக் கூட்டத்தில் கமல் பேச்சு

author img

By

Published : Oct 2, 2019, 7:59 PM IST

Updated : Oct 2, 2019, 8:12 PM IST

திருவள்ளூர்: அரசியலை வியாபாரமாக செய்து பிழைக்கலாம் என்று நினைப்பவர்களை கட்டுப்படுத்த முடியாது என்றும், அதற்கு உதாரணமாக அமெரிக்கா இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

mnm leader kamalhassan

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் பொது மக்களின் பல்வேறு பிரச்னைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார். மீனவர்கள் நிரந்தரமாக முகத்துவாரத்தை தூர்வார கோரிக்கை வைத்தனர். இருபது ஆண்டு காலமாக ஆண்டுக்கு ஒருமுறை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மக்களோடு மக்களாய் அமர்ந்த கமல்
மக்களோடு மக்களாய் அமர்ந்த கமல்

பழவேற்காடு கடற்கரை பகுதியில் அதானி துறைமுகம் அமைக்கப்பட்டால் 50 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர். மேலும், குடிநீர், கழிப்பறை, மழை நீர் சேகரிப்பு, மின்சார தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து கமல்ஹாசனிடம் தெரிவிக்கப்பட்டது.

கிராம சபைக் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல், ‘பழவேற்காடு பகுதியில் மக்களுக்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாதம் ஒருமுறை முகாம் அமைக்கப்படும். அரசு மக்கள் சம்பந்தப்பட்டது. துறைமுகத்தை விரிவுபடுத்தினால் சென்னை உள்ளிட்ட ஒரு கோடி மக்களுக்கும் மேல் பாதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.

கிராம சபைக் கூட்டத்தில் கமல்ஹாசன்

மேலும், “மதக்கொள்கை அரசு கொள்கையாக எடுத்துக்கொள்ளக்கூடாது, அரசியலை வியாபாரமாக செய்து பிழைக்கலாம் என்று நினைப்பவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு உதாரணமாக அமெரிக்கா இருக்கிறது. தேர்தலில் நடக்கும் ஊழல்களை தாங்க முடியாமல் பின் வாங்கினோம். ஜெயிலில் போடுவார்கள் என்று பயந்து தவறு செய்ய மாட்டார்கள். தேர்தலில் பணம் விளையாடுகிறது. 15 கோடி ரூபாயை பார்க்கவில்லை. நாங்கள் ஏழரை கோடி மக்களை பார்த்தோம்” என்றும் கூறினார்.

இதையும் படிங்க: இன்ஜினியர்களுக்கு தித்திக்கும் செய்தி! - இஸ்ரோவில் வேலை

Intro:அரசு மக்கள் சம்பந்தப்பட்டது மக்கள் சம்பந்தப் படவில்லை என்றால் அரசு தானாகவே நீங்கும் அது இயற்கை தானே துறைமுகத்தை விரிவுபடுத்தினார் சென்னை உள்ளிட்ட ஒரு கோடி மக்களுக்கும் மேல் பாதிக்கப்படுவார்கள் என நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் பேட்டி.


Body:திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமலஹாசன் கலந்து கொண்டு பொது மக்களின் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார் . மீனவர்கள் நிரந்தரமாக முகத்துவாரத்தை தூர்வார கோரிக்கை வைத்தன கடந்த இருபது ஆண்டு காலமாக ஆண்டுக்கு ஒருமுறை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அரசு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . டூர் வருவதற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தடுப்பதாகவும் தூண்டில் வளைவு அமைத்து நிரந்தரமாக தூர்வார வேண்டும் என்றும் பழவேற்காடு கடற்கரை பகுதியில் அதானி துறைமுகம் அமைக்க கூடாது 50 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் அதனை தடுக்க மக்கள் நீதி மைய மீனவர்கள் பாடுபட வேண்டும் என மீனவர்களுக்கு கோரிக்கை வைத்தனர் . அப்போது அதிமுக கவுன்சிலர்கள் முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் சுமித்ரா குமார் முதல்வர் நிதி ஒதுக்கி மணல் வாரி இயந்திரம் மூலம் தூர்வாரி வருவதாகவும் 27 கோடி மேலும் நிதி ஒதுக்கி உள்ளதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கு சலசலப்பு ஏற்பட்டது உடனடியாக கமல் அங்கிருந்து வெளியேறினார் . உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ள பொன்னேரி அரசு தொடக்கப்பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவியை முத்தரசி கமலிடம் மனு அளித்து பள்ளியின் அடிப்படை வசதி சுகாதாரம் போன்றவற்றிற்கு உரிய தீர்வு காணுமாறு கோரிக்கை வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல் பழவேற்காடு பகுதியில் மக்களுக்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் மக்கள் நீதி மையம் மூலம் மருத்துவ முகாம் அமைக்கப்படும் மாதம் ஒருமுறை முகாம் அமைக்கப்படும் அரசு மக்கள் சம்பந்தப்பட்டது மக்கள் சம்பந்தப் படவில்லை என்றால் அரசு தானாகவே நீங்கும் அது இயற்கை பல திட்டங்களை இந்தியாவில் தெரிவிப்பதாகவும் அது மக்களுக்கு புரியவில்லை என்றும் துறைமுகத்தை விரிவுபடுத்தினால் சென்னை உள்ளிட்ட ஒரு கோடி மக்களுக்கும் மேல் பாதிக்கப்படுவார்கள் . மதக்கொள்கை அரசு கொள்கையாக எடுத்துக்கொள்ளக்கூடாது கள்ளச்சாராயம் உருவாகும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது அவர்கள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் வியாபாரத்தை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் அரசியலை வியாபாரமாக செய்து பிழைக்கலாம் என்று நினைப்பவர்களை கட்டுப்படுத்த முடியாது அதற்கு உதாரணம் அமெரிக்கா அந்த தவறை நிறுத்தக்கூடாது தேர்தலில் நடக்கும் ஊழல்களை தாங்க முடியாமல் பின் வாங்கினோம் ஜெயிலில் போடுவார்கள் என்று பயந்து தவறு செய்ய மாட்டார்கள் என்றும் அதனால் நாங்கள் விரும்பவில்லை தேர்தலில் பணம் விளையாடுகிறது 15 கோடியை பார்க்கவில்லை நாங்கள் ஏழரை கோடி மக்களை பார்த்தோம் என அவர் தெரிவித்தார் இதில் நடிகர் சினேகன் உள்ளிட்ட மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


Conclusion:
Last Updated :Oct 2, 2019, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.