ETV Bharat / state

தொப்புள் கொடி காயும் முன் பச்சிளம் குழந்தையை ஆற்றில் வீசிய கொடூரம்

author img

By

Published : Aug 1, 2022, 6:59 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில், பிறந்து தொப்புள் கொடி காயும் முன்னே பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது.

தொப்புள் கொடி காயும் முன் பச்சிளம் குழந்தையை ஆற்றில் வீசிய கொடூரம்
தொப்புள் கொடி காயும் முன் பச்சிளம் குழந்தையை ஆற்றில் வீசிய கொடூரம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த முத்துக்கொண்டாபுரம் கிராமத்திற்கு அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலத்திற்கு அடியில் பிளாஸ்டிக் கவரில் இறந்ந நிலையில் பெண் பச்சிளம் குழந்தை இருப்பதாக ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் கனகம்மாசத்திரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது தொப்புள் கொடி காயாத முன்பே பிறந்த பெண் குழந்தை ஒன்று பிளாஸ்டிக் கவரில் அடைத்து சடலமாக கிடந்தது.

இக்குழந்தையை யாரோ வீசி சென்றது தெரியவந்தது. இறந்த பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்ட காவல்துறையினர், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பாலாற்றில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.