ETV Bharat / state

கார் விபத்து: 4 பேர் படுகாயம்

author img

By

Published : Apr 20, 2019, 7:29 AM IST

திருவள்ளூர்: குடிபோதையில் காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த நான்கு போ் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்புக்காட்சி

ஆந்திரா மாநிலத்திற்கு சுற்றுலாவிற்கு சென்றுவிட்டு சென்னை நோக்கி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பெரியபாளையம் சாலையில் வேகமாக கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது கார் நிலைதடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளனது.

விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை காவல்துறையினர் நான்கு பேரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அதில் காரில் வந்தவர்கள் சென்னை சர்மா நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் குடித்து விட்டு காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநிலத்திற்கு சுற்றுலா சென்று விட்டு சென்னைக்கு வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

19-04-2019

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் அருகே ஆந்திரா மாநிலத்திற்கு  சுற்றுலாவிற்கு சென்றுவிட்டு குடிபோதையில் காரை ஓட்டி வந்த போது நிலை தடுமாறி மரத்தில் மோதி கார் விபத்து ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் படுகாயம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

 திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை 
பெரியபாளையம் சாலையில்  பேரன்டூர் பகுதியில் வேகமாக வந்த கார் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கார் ஓட்டுநர் நாம்தான் குருமூர்த்தி விக்னேஷ் குமார் சந்தோஷ் உள்ளிட்ட 4 பேரும் படுகாயமடைந்தனர் விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை போலீசார் நான்கு பேரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள்
சென்னை சர்மா நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் குடித்து விட்டு காரை ஓட்டி வந்ததும் ஆந்திர மாநிலத்திற்கு சுற்றுலா சென்று விட்டு சென்னைக்கு வீடு திரும்பும் வழியில் நிலை தடுமாறி மரத்தில் மோதி படுகாயமடைந்த தெரியவந்தது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.