ETV Bharat / state

குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு

author img

By

Published : Aug 30, 2019, 3:27 AM IST

திருவள்ளூர்: ஆவடி அருகே மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 வயது குழந்தை உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடிசையில் எற்பட்ட தீ விபத்தில் 3 வயது சிறுவன் தீயில் கருகி உயிரிழப்பு


திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன்(32). இவரது மனைவி மஞ்சு(28). இவர்களுக்கு துரையரசன்(5), தினேஷ்(3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குடிசையில் எற்பட்ட தீ விபத்தில் 3 வயது சிறுவன் தீயில் கருகி உயிரிழப்பு

கொள்ளுமேட்டில் புதிதாக வீடுகட்டி வருவதால், தற்காலிகமாக அருகே குடிசை அமைத்து அதில் குடும்பத்துடன் பச்சையப்பன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனியார் பள்ளியில் UKG படிக்கும் துரையரசனை பள்ளியில் இருந்து அழைத்து வர நேற்று மாலை மஞ்சு சென்றார். அப்போது, 3 வயது குழந்தை தினேஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததால், வீட்டை தாழிட்டு சென்றுள்ளார். மஞ்சு சென்ற சிறிது நேரத்தில் குடிசை வீட்டின் மேலே செல்லும் மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறி குடிசை மீது விழுந்தது.

இதையடுத்து, குடிசை வீட்டில் மளமளவென தீப்பற்றியது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தீயை அணைக்க போராடினர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. திடீரென வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டரும் வெடித்ததால், வீடு முழுவதும் சேதமடைந்ததுடன், 3 வயது குழந்தையும் உடல் கருகி உயிரிழந்தது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். மேலும், சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 வயது சிறுவன் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:சென்னை ஆவடி அருகே மின் கசிவு காரணமாக எற்பட்ட தீவிபத்தில் 3 வயது சிறுவன் தீயில் கருகி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்கல் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுBody:சென்னை ஆவடி அருகே மின் கசிவு காரணமாக எற்பட்ட தீவிபத்தில் 3 வயது சிறுவன் தீயில் கருகி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்கல் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன்/32 இவருக்கு மஞ்சு/28 என்பவருடன் திருமணமாகி துரையரசன்/5 ,தினேஷ்/3 ஆகிய இரண்டு மகன உள்ளனர். பச்சையப்பன் கொள்ளுமேட்டில் புதிதாக வீடுகட்டி வருவதால் அருகே குடிசை அமைத்து அதில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் இன்று மாலை மஞ்சு தனியார் பள்ளியில் UKG படிக்கும் மூத்த மகன் துரையரசன் பள்ளியில் இருந்து அழைத்து வர சென்றுள்ளார்.அப்போது தினேஷ் வீட்டில் தூங்கி கொண்டு இருந்துள்ளான்.அதனால் வீட்டை தாழிட்டு சென்றுள்ளார். மஞ்சு சென்ற சிறிது நேரத்தில் குடிசை வீட்டின் மேலே செல்லும் மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறி குடிசை மீது விழுந்துள்ளது.இதனை அடுத்து குடிசை வீடு மளமளவென தீப்பற்றி ஏரிந்துள்ளது.இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க போராடினர்.ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.திடீரென வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டரும் வெடித்ததால் தீவிபத்தில் வீட்டில் பொருட்கள் உட்பட உள்ளே இருந்த 3 வயது சிறுவனும் உடல் கருகி உயிர் இழந்தான்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனம் மூலம் தீயை அனைத்தனர்.3 வயது சிறுவன் தீயில் கருகி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.