ETV Bharat / state

தள்ளாடும் வயதில் வாக்களிக்க வந்த மூதாட்டி: தோளில் சுமந்து வாக்களிக்கச் செய்த காவல் உதவி ஆய்வாளர்

author img

By

Published : Oct 9, 2021, 12:31 PM IST

திருநெல்வேலி: வள்ளியூரில் தள்ளாடும் வயதில் வாக்களிக்க வந்த மூதாட்டி ஒருவரை தனது தோளில் சுமந்துசென்று வாக்களிக்க செய்த காவல் உதவி ஆய்வாளரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.

polling
polling

திருநெல்வேலி மாவட்டம் நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் இன்று (அக்.09) காலை 7 மணி முதல் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், வள்ளியூர் யூனியன் சங்கனாபுரத்தை சேர்ந்த சங்கரம்மாள் (88) என்ற மூதாட்டி வாக்களிக்க வந்தார். வயது மூப்பு காரணமாக அவர் கையில் தடியுடன் சிரமத்துடன் நடந்து வந்தார்.

f
உதவி செய்த உதவி ஆய்வாளர்

இதை அங்கு பணியில் இருந்த மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சையத் நிஸார், சங்கரம்மாளை தனது தோளில் சுமந்து சென்று வாக்களிக்க உதவி செய்தார். உதவி ஆய்வாளரின் இந்தச் செயல் அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

இதையும் படிங்க: ஜனநாயக உரிமை மறுப்பா? - தேர்தல் பணிக்குச் சென்றோர் பரிதவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.