ETV Bharat / state

பள்ளி மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்த விவகாரம்: தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்!

author img

By

Published : Feb 5, 2023, 1:37 PM IST

பள்ளி மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது தொடர்பான காணொளி காட்சி வெளியானது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பள்ளி தலைமை ஆசிரியர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்த சர்ச்சை
பள்ளி மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்த சர்ச்சை

பள்ளி மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்த சர்ச்சை: தலைமை ஆசிரியர் இடமாற்றம்

தேனி: ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 12 ஆசிரியர்கள் பணியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி பள்ளி கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்தது தொடர்பான காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் பெற்றோர்களும், அப்பகுதி பொதுமக்களும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும் தலைமை ஆசிரியரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் மற்றும் பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து ஆகியோர் அடுத்தடுத்து 3 நாட்களாக மேற்கொண்ட விசாரணையில் உரிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு தேனி மாவட்ட ஆட்சியர் மூலம் அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பள்ளியை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜனகராஜ் தேனி மாவட்டம் சக்கம்பட்டியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் எழுவனம்பட்டி அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: "கூடா நட்பு கேடாய் முடியும்": நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது ஏற்பட்ட விபரீதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.