ETV Bharat / state

துரோணாச்சாரியாரை சந்தித்த ஓ.பி.ஆர்

author img

By

Published : Sep 5, 2019, 4:56 PM IST

தேனி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது ஆரம்பப் பள்ளி ஆசிரியரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார் மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார்.

opr got his teachers wish

தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரகுமார் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது ஆரம்பப் பள்ளி ஆசிரியரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். மேலும், அவரது ஆசிரியரின் புகைப்படத்தை நினைவு பரிசாகவும் வழங்கியுள்ளார்.

opr got his teachers wish
பள்ளி ஆசிரியரை சந்தித்து ஆசி பெற்ற தேனி மக்களவை உறுப்பினர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஏதுமறியா பருவத்தில் என்னை செதுக்கிய துரோணாச்சாரியார் என அவரது ஆசிரியர் செல்வராஜை குறிப்பிட்டுள்ளார்.

Intro:Body:

கழக மக்களவைத் தலைவர், தேனி நாடாளுமன்ற உறுப்பினர், தேனி மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர், அண்ணன் திரு ப.ரவீந்திரநாத்குமார்,MBA,MP., அவர்கள் இன்று (05-09-2019) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது ஆசிரியரான திரு செல்வராஜ் அவர்களை சந்தித்து, வாழ்த்து தெரிவித்து, ஆசி பெற்றார்...



ஏதுமறியாத எட்டு வயது சிறுவனாய் நான் பள்ளிக்குள் நுழைந்த பொழுது என்னை பற்றி எதுவுமே அறியாத தாங்கள் என்னை நேசிக்க தொடங்கி அன்பும் அக்கறையும் தந்தை போன்ற கண்டிப்பும் சம விகிதத்தில் கலந்து இனம்புரியாத வயதில் என்னை செதுக்கிய துரோணாச்சாரியார்..

தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும் இவ்வுலகை பள்ளி விட்டு வந்த பின்புதான் புரிந்து கொண்டேன் மீண்டும் அன்னை மடி தேடி வந்தேன்..எவ்வளவு உயரம் அடைந்தாலும் நான் எப்போதும் உங்கள் மாணவன் தான் என்பதை தங்களுக்கு நினைவு கூற ஓடிவந்தேன்..



என் சிறு இதயத்தில் எப்பொழுதும் பெரும் சிம்மாசனம் உங்களுக்காய் ஒதுக்கப்பட்டிருக்கும் என் ஆசிரிய தந்தைக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.