ETV Bharat / state

வேகமாக நிரம்பும் வைகை அணை; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

author img

By

Published : Dec 15, 2022, 7:58 AM IST

தேனியில் பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு முதற் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனியில் கனமழை; வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தேனியில் கனமழை; வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனியில் கனமழை; வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த வந்த கனமழை காரணமாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. மேலும் மூல வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

வைகை அணையின் மொத்த கொள்ளளவான 71 அடியில் 66.1 அடியை எட்டியதைத் தொடர்ந்து அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்ததால் வைகை கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வைகை அணையில் நீர் வரத்து நேற்று முதல் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு அணைக்கு வரும் நீர்வரத்து 3,211 கன அடியை எட்டிய போது வைகை கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

அணையின் நீர் இருப்பு 4,854 கனடியாக இருக்கிறது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 69 கன அடியாக இருந்து வருகிறது.

எனவே வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், கரையைக் கடக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை பள்ளிகளில் நிர்பயா நிதியின்கீழ் சானிட்டரி நாப்கின்: மாநகராட்சி திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.