ETV Bharat / state

விவசாயி சுட்டுக்கொன்ற விவகாரம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 1:27 PM IST

Theni farmer dead: தேனியில் வனத்துறையினர் சுட்டதில் உயிரிழந்த விவசாயி ஈஸ்வரனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனியில் விவசாயி சுட்டுக்கொன்ற விவகாரம்; விவசாயி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து ஊருக்கு சென்றதால் பரபரப்பு!
தேனியில் விவசாயி சுட்டுக்கொன்ற விவகாரம்; விவசாயி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து ஊருக்கு சென்றதால் பரபரப்பு!

தேனி: தேனியில் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயின் உடலை உத்தமபாளையம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பிரோத பரிசோதனை கூடத்தில் விசாரணை நடத்தும் போது ஈஸ்வரனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உடலை வாங்க மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 51), அக் 28 இரவு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வண்ணத்திப்பாறை பகுதிக்கு சென்று இருக்கிறார். அப்போது வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வனத்துறையினரை கத்தியை காட்டி மிரட்டியதால் அவரை வனத்துறையினர் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விவசாயி ஈஸ்வரனின் உறவினர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஈஸ்வரனின் உடலை கம்பம் அரசு மருத்துவமனை, தேனி காணாவிலக்கு மருத்துவமனையில் வைத்துள்ளோம் எனக் கூறி உறவினர்களை அழைக்கழித்தாக கூறப்படுகிறது.

துப்பாக்கியால் சுட்ட வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஈஸ்வரன் என்ன தப்பு செய்ததால் அவரை வனத்துறையினர் சுட்டுக்கொண்றனர் என்பதை ஆதரத்துடன் நிரூபிக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உயிரிழந்த விவசாயி ஈஸ்வரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் ஈஸ்வரனின் உடல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் உத்தமபாளையம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ராமநாதன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்திற்கு வருகை தந்து உயிரிழந்த ஈஸ்வரன் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் ராமநாதன் விசாரணை நடத்தி கொண்டு இருக்கும் போது, பிரேத பரிசோதனை கூடத்திற்கு வெளியே கூடியிருந்த ஈஸ்வரனின் உறவினர்கள், துப்பாக்கியால் சுட்ட வனவர் திருமுருகன், வனக்காவலர் பென்னி ஆகியோரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி தங்கள் ஊருக்கு திரும்ப சென்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த விவசாயி ஈஸ்வரனின் குடும்பத்தினரிடம் உத்தமபாளையம் நீதிபதி ராமநாதன், விசாரணை மேற்கொண்டார். மருத்துவமனையில் விவசாயியின் உடலை உடற்கூராய்வு செய்ததை முழு காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "சுட்டுக் கொல்வதற்கு எங்க அப்பா என்ன தீவிரவாதியா?" - உயிரிழந்த விவசாயி மகள் ஆதங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.