ETV Bharat / state

சொத்து பிரச்சனையில் நூதன முறையில் தற்கொலை முயற்சி.. தேனி பகீர் சம்பவம்!

author img

By

Published : Apr 22, 2023, 2:18 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சொத்து பிரச்சனை விவகாரத்தில் நபர் ஒருவர் நூதன முறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Etv Bharat
Etv Bharat

தேனியில் சொத்து பிரச்சனையால் விவசாயி ஜீவசமாதி மூலம் தற்கொலை முயற்சி!!

தேனி: ஆண்டிப்பட்டி அருகே உள்ள அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காஜாமைதீன். இவருக்கு முகமது சுல்தான், முகமது சுகேஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்தவரான முகமது சுல்தான் அடைக்கப்பட்டியில் விவசாயம் செய்து வருகிறார். இளையமகன் முகமது சுகேஸ் போடியில் பால் பண்ணை நடத்தி வருகிறார். காஜாமைதீனுக்கு அடைக்கப்பட்டி கிராமத்தில் 15 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள நிலையில் இந்த சொத்துக்களை காஜாமைதீன் தனது இரண்டு மகன்களுக்கு பிரித்து வழங்கியுள்ளார்.

இதில் இளைய மகன் முகமது சுகேஸ்யிலுக்கு மட்டும் அதிக மதிப்புடைய சொத்துக்களை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மூத்த மகன் முகமது சுல்தான் சொத்து பிரித்து வழங்கியதில் தந்தை பாகுபாடு காட்டியதாக கூறி அடைக்கப்பட்டியில் உள்ள அவரது நிலத்தில் ஆளுயுற குழிதோண்டி அதில் இறங்கி மண்ணை போட்டு மூடி ஜீவசமாதி அடைந்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.

மேலும் தனது கையையும் கண்ணாடியால் கீறி கொண்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கண்டமனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் முகமது சுல்தானிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 மணிநேரத்திற்கும் மேலாக மண்ணில் இருந்ததாலும், அதிகமான ரத்தம் வெளியேறியதாலும் முகமது சுல்தான் மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து அவரை மீட்ட போலீசார் ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்துப் பிரச்சனையால் விவசாயி ஜீவசமாதி மூலம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டிடிவி தினகரனுக்கு தூது.. தேனியில் திடீர் ஆலோசனை கூட்டம்.. ஓபிஎஸ்-ன் அதிரடி ஆக்‌ஷன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.