ETV Bharat / state

வீட்டை உடைத்து பணம் திருட்டு - சிறுவர்கள் கைது

author img

By

Published : Feb 11, 2023, 10:56 PM IST

வீட்டை உடைத்துக் கொள்ளையடித்த சிறுவர் உட்பட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 95 ஆயிரம் ரூபாய் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

தேனி: பெரியகுளம் அருகேவுள்ள லட்சுமிபுரம் பகுதியில் கடந்த மாதம் பூட்டி இருந்த வீட்டின் கதவு உடைத்து வீட்டில் இருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இக்கொள்ளை சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியின் வீடுகள் மற்றும் தெருக்களில் இருந்த சிசிடிவி கட்சி பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை காவல் துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கொள்ளையர்களை பிடிக்க முடியாத நிலையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு தொடர்ந்து
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியைச் சேர்ந்த கோகுல் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இரண்டு சிறுவர்களும் லட்சுமிபுரம் பகுதியில் கட்டடப் பணிகளுக்காக வந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து காவல் துறையினர், சிறுவர்கள் என்பதால் அவர்கள் பகுதிக்குச் சென்று நோட்டமிட்டு கண்காணித்தபோது லட்சுமிபுரம் பகுதியில் வீட்டை உடைத்து பணம் கொள்ளையடித்தது சிறுவர்கள் தான் என உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் பெரியகுளம் தென்கரை காவல் துறையினர் கைது செய்ததோடு அவர்களின் வீட்டில் இருந்த 95 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் தென்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கோகுல் என்றவருக்கு 18 வயது முடிவடைந்ததால் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் பெரியகுளம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், 17 வயது சிறுவனை தேனி சிறார் நீதிமன்றத்தில் நிறுத்தி அச்சிறுவனை நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாட்கள் மதுரை சிரார் சிறையில் காவல் துறையினர் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் 3 மகள்களை வாளால் தாக்கிய தந்தை கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.