ETV Bharat / state

குன்னூரில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

author img

By

Published : Oct 13, 2019, 5:32 PM IST

நீலகிரி: குன்னூர் பகுதியில் பெய்த கன மழையால் கிராமத்தில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து பத்திற்கும் மேற்பட்ட  வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் சிரமமடைந்துள்ளனர்.

coonoor heavy rain

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் மண்சரிவுகளும், மரங்களிலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கோத்தகிரி, குன்னூர், வெலிங்டன் ஆகிய பகுதிகளில் கடுமையான மழை பெய்தது.

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

இதனைத்தொடர்ந்து வெலிங்டனில் உள்ள அண்ணா நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து பத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக வீடுகளில் இருந்த டீவி, வாஷிங் மெஷின் போன்ற எலக்ட்ரானிக்கல் பொருட்களும் சேதமடைந்தது.

இதுதொடர்பாக குன்னூர் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மீட்புக்குழுவினர் சேதமடைந்த பகுதிகளைச் சீர் செய்தனர். மேலும் தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கூடுதல் ஆட்சியர் அறிவுறுத்திவருகிறார். மேலும், கனமழை காரணமாக பாதுகாப்பு மையங்களும் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பட்டப்பகலில் குளியலறை ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி!

Intro:நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இரவு பெய்த கன மழையால் கிராமத்தில் மழைநீர் புகுந்து வீடுகள் சேதம்


Body:நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக சில இடங்களில் மண்சரிவு களும் மரங்களிலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது நிலையில் கோத்தகிரி குன்னூர் வெலிங்டன் ஆகிய பகுதிகளில் கடுமையான மழை பெய்தது இதனைத்தொடர்ந்து வெலிங்டனில் உள்ள அண்ணா நகர் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் கழிவு நீருடன் கலந்து வீடுகள் பத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது இதன் காரணமாக வீடுகளில் இருந்த டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் போன்ற எலக்ட்ரானிக்கல் பொருட்களும் சேதமடைந்தது இதுதொடர்பாக குன்னூர் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மீட்புக்குழுவினர் சேதமடைந்த பகுதிகளை சீர் செய்தனர் மேலும் தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனைத்தொடர்ந்து ஆற்றங்கரையோரம் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கூடுதல் ஆட்சியர் அறிவுறுத்தி வருகிறார் மேலும் கனமழை காரணமாக பாதுகாப்பு மையங்களும் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.