ETV Bharat / state

குன்னூரில் பலத்த மழை: பெரும்பாலான இடங்களில் மண் சரிவு

author img

By

Published : Oct 31, 2019, 12:29 PM IST

நீலகிரி: குன்னூரில் பலத்த மழையால் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்ததுடன், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

குன்னூரில் பலத்த மழை!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தடுப்பு சுவர் இடிந்து விழுந்து இரு கார்கள் சேதம்

பின்னர் தீயணைப்பு துறையினர் மரங்களை வெட்டி அகற்றியதால் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, குன்னூர் மவுண்ட்ரோடு அருகே அமைந்துள்ள தடுப்பு சுவர் இடிந்து விழுந்து இரண்டு வாகனங்கள் முழுமையாக சேதமடைந்தன. டிடிகே சாலையில் கற்களுடன் மண் சரிவு ஏற்பட்டதால், வீடுகள் இடிந்து விழும் அபாய நிலையில் அந்தரத்தில் தொங்குகின்றன.

இதனால், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என காவல் துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். மேலும், ஆபத்தான இடங்களில் குடியிருப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளை விட்டு வெளியே வருமாறு வருவாய்த் துறையினர் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

'இந்தாண்டு 3 செ.மீ. மழை அதிகமாகப் பதிவாகியுள்ளது'

Intro:குன்னூரில் பலத்த மழையினால் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து இரு கார்கள் சேதமடைந்தன. வீடுகள் அந்தரத்தில் தொங்குவது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நள்ளிரவில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . தீயணைப்பு துறையினர் மரங்களை வெட்டி அகற்றியதால் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில் குன்னூர் மவுண்ட்ரோடு அருகே தடுப்பு சுவர் இடிந்து விழுந்து இரு கார்கள் முழுமையாக சேதமடைந்தன.
டிடிகே சாலை யில் கற்களுடன் பெரிய மண் சரிவு ஏற்பட்டதால் வீடுகள் இடிந்து விழும் அபாய நிலையில் அந்தரத்தில் தொங்குகின்றன.
சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
மேலும் ஆபத்தான இடங்களில் குடியிருப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளை விட்டு வெளியே வருமாறு வருவாய்த் துறையினர் தகவல் தெரிவித்து வருகின்றனர்.




Body:குன்னூரில் பலத்த மழையினால் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து இரு கார்கள் சேதமடைந்தன. வீடுகள் அந்தரத்தில் தொங்குவது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நள்ளிரவில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . தீயணைப்பு துறையினர் மரங்களை வெட்டி அகற்றியதால் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில் குன்னூர் மவுண்ட்ரோடு அருகே தடுப்பு சுவர் இடிந்து விழுந்து இரு கார்கள் முழுமையாக சேதமடைந்தன.
டிடிகே சாலை யில் கற்களுடன் பெரிய மண் சரிவு ஏற்பட்டதால் வீடுகள் இடிந்து விழும் அபாய நிலையில் அந்தரத்தில் தொங்குகின்றன.
சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
மேலும் ஆபத்தான இடங்களில் குடியிருப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளை விட்டு வெளியே வருமாறு வருவாய்த் துறையினர் தகவல் தெரிவித்து வருகின்றனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.