ETV Bharat / state

மலை ரயில் பாதையில் விலங்குகளை கண்காணிக்கும் கேமரா!

author img

By

Published : Nov 4, 2020, 11:40 AM IST

நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதை தண்டவாளங்களில் கேமரா அமைத்து வன விலங்குகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

elephant
elephant

அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் யானை, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேவைக்கு மனிதர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் விலங்குகள் வருவதால் குடியிருப்புவாசிகள் அச்சப்படுகின்றனர்.

சில நேரங்களில் யானைகள் மனிதர்களை தாக்குவதால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. வறட்சியான காலத்தில் யானைகள் சமவெளி பகுதிகளிலிருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி மலைப் பகுதிக்கு வருகின்றன. அவ்வாறு வரக்கூடிய வன விலங்குகள் குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே உள்ள வனப்பகுதிக்குள் சுற்றித்திரியும்.

அவ்வப்போது சாலை மற்றும் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தண்டவாளங்களில் உலா வருகின்றன. இந்நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள தண்டவாளத்தில் கேமராக்கள் அமைத்து அங்கு வரக்கூடிய வன விலங்குகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அர்னாப் கோஸ்வாமி கைது: தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் மும்பை காவல் துறை அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.