ETV Bharat / state

65 வயது முதியவர் சந்தேக மரணம்: போலீஸ் விசாரணை!

author img

By

Published : Nov 10, 2019, 9:46 PM IST

Updated : Nov 11, 2019, 8:09 AM IST

தஞ்சை: தாமரங்கோட்டை அருகே 65 வயது முதியவர் சந்தேகமான முறையில் உயிரிழந்ததால் காவல் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

police-under-investigation

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள தாமரங்கோட்டை மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (65). இவர் தனது மகள்கள் ராணி, பாப்பாத்தி ஆகியோருக்கு திருமணம் செய்துகொடுத்த பின், மகன் கண்ணன் என்கிற சூசைராஜ், மருமகள் அமுதா ஆகியோருடன் அதேப் பகுதியில் வசித்துவந்தார்.

இதனிடையே, துவரங்குறிச்சியிலிருந்து தாமரங்கோட்டை செல்லும் முக்கியச் சாலை அருகே உள்ள கொட்டகையில் செல்வராஜ் தினந்தோறும் படுத்து உறங்குவது வழக்கம். செல்வராஜின் உறவினர் ஒருவர் நேற்று காலை எப்போதும் போல அவரை சந்திக்க கொட்டகைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கே செல்வராஜ் கைகள் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் சடலமாகக் கிடந்துள்ளார். இதையடுத்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்கு சம்பவம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி, அதிராம்பட்டினம் ஆய்வாளர் ஜெயமோகன் விரைந்துவந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் காவலர்கள் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து செல்வராஜ் உடல் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

செல்வராஜின் கொட்டகை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் சோதனை

மேலும் படிக்க: நண்பனைக் கொன்று வாட்ஸ்அப்பில் வாக்குமூலம்: குற்றவாளிக்கு போலீஸ் வலைவீச்சு!

Intro:65 வயது முதியவர் மர்ம நபர்களால் கொலை-மோப்ப நாய் வரவழைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் தஞ்சை எஸ்பி ஆய்வு


Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள தாமரங்கோட்டை மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் வயது 65. இவர் தனது மகன்கள் ராணி மற்றும் பாப்பாத்தி ஆகியோர் திருமணம் செய்யப் பட்டு கொடுத்த நிலையில் கண்ணன் என்கிற சூசைராஜ் மற்றும் மனைவி அமுதா ஆகியோருடன் அதே பகுதியில் வசித்து வந்தார் .இந்நிலையில் துவரங்குறிச்சியில் இருந்து தாமரங்கோட்டை செல்லும் மெயின் ரோடு அருகே உள்ள கொட்டகையில் தான் செல்வராஜ் படுத்து உறங்குவது வழக்கம். இந்நிலையில் செல்வராஜின் உறவினர் ஒருவர் காலை எப்பொழுதும் போல செல்வராஜ் தங்கியிருந்த கொட்டகைக்குசெல்வராஜை பார்ப்பதற்கு சென்றுள்ளார் .அப்போது அங்கே செல்வராஜ் கைகள் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் பிணமாக கிடந்தார். இதை அடுத்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி கணேசமூர்த்தி அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் ஆகியோர் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் கொலை செய்த மர்ம நபர்களை மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர் தஞ்சையைச் மகேஸ்வரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு அதோடு இந்த கொலை தொடர்பாக போலீசாரிடம் விவரம் கேட்டிருந்தார்.


Conclusion:
Last Updated : Nov 11, 2019, 8:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.