ETV Bharat / state

செய்தியாளர்களிடம் உளறிய அமைச்சர் -பரபரப்பு

author img

By

Published : Jul 7, 2019, 10:49 PM IST

தஞ்சாவூர்: நெல் குவிண்டாலுக்கான விலையை தெரிவிக்கும்போது கரும்பிற்கான விலையை சொன்னேன் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு உளறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்

ஜூலை 4ஆம் தேதி சென்னையில் 500 புதிய பேருந்துகளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக கும்பகோணத்தில் இருந்து காரைக்கால், குமுளி வரை செல்லக்கூடிய ஆறு புதிய பேருந்துகளை வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய துரைக்கண்ணு, ”விவசாயிகள் நலன் கருதி தொடர்ந்து நெல்லுக்கு ஆதாய விலை குவிண்டாலுக்கு ரூபாய் 2,750 வழங்கி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் குவிண்டாலுக்கு அதிக விலை அளிக்க முதலமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கிடைக்க தமிழ்நாடு முதலமைச்சர் வழியாக போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, நெல் குவிண்டாலுக்கான விலையை செய்தியாளர்கள் கேட்டபோது, கரும்பிற்கான விலையை சொன்னேன் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

Intro:தஞ்சாவூர் ஜுலை 07

6 புதிய வழித்தடங்களை பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்து நெல் குவிண்டாலுக்கு 2750 தரப்படும் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Body: கடந்த 4ம் தேதி சென்னையில் 500 புதிய பேருந்துகளை தமிழ் முதல்வர் துவக்கி வைத்தார் அதன் தொடர்ச்சியாக கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் மற்றும் குமுளி ஆகிய 6 புதிய பேருந்துகளை வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கொடியசைத்து துவக்கி வைத்தார் இன்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

@பத்திரிகையாளர் சந்தித்து பேட்டி அளித்தபோது : விவசாயிகள் நலன் கருதி தொடர்ந்து நெல்லுக்கு ஆதாய விலை குவிண்டாலுக்கு ரூ 2750 வழங்கி வருகிறார்கள் ஆணையிட்டுள்ளனர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் குவிண்டாலுக்கு அதிக விலை அளிக்க முதலமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கிடைக்க
தமிழக முதல்வர் வழியாக போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் சட்டசபையில் வரும் 12ஆம் தேதி அறிவிக்கப்படும் வேளாண்மை துறை மானிய கோரிக்கையில் விவசாயிகளுக்கு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். நெல் குவிண்டாலுக்கு விலையை கேட்டால் கரும்பிற்கான விலையை சொன்னேன் என்று உளறினார் வேளாண்மைத்துறை அமைச்சர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.