ETV Bharat / state

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன்... குளத்தில் கவிழ்ந்து விபத்து... 20 பேர் படுகாயம்

author img

By

Published : Aug 22, 2022, 2:33 PM IST

Updated : Aug 22, 2022, 3:59 PM IST

தென்காசி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன்
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன்

தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர் பகுதியிலிருந்து இரண்டு சுற்றுலா வேன்கள் குற்றாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அய்யாபுரம் விலக்கு இடையான்குளம் குளத்துக்கரை பகுதியில் செல்லும் போது, வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற ஆட்டோ மீது மோதி பக்கத்திலிருந்த குளத்து கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த ஊர் பொதுமக்கள் காவல்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து, மீட்பு பணியில் ஈட்டுபட்டு காயமடைந்தவர்களை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன்

அதில் இருவர் ஆபத்தான நிலைமையில் இருப்பதால் பாளை ஹைகிரண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து தென்காசி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலாற்று மேம்பாலத்தை உடைத்து கொண்டு விழுந்த கார்...

Last Updated :Aug 22, 2022, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.