தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் அமைச்சரின் உத்தரவுப்படி கரோனா தடுப்பூசி படிப்படியாக போடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முன் களப்பணியாளர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் எனப் பொது மக்களுடன் நேரடி தொடர்பில் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அதன்படி தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் வருவாய்த்துறை, காவல்துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதையொட்டி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் கரோனா தடுப்பூசியினை போட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'கரோனா தடுப்பூசி எப்போது எடுத்துக்கொள்ளக்கூடாது' - விளக்கும் மருத்துவர்!