ETV Bharat / state

பட்டப்பகலில் படுகொலை - டாஸ்மாக் ஊழியருக்கு சரமாரி வெட்டு!

author img

By

Published : Aug 12, 2020, 4:30 PM IST

தென்காசி: சாம்பவர் வடகரையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

Tasmac supervisor muder
Tasmac supervisor muder

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாண்டியன் (51). இவர் இடைகால், சங்குபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.

சாம்பவர் வடகரை அக்ரஹாரம் தெருவில் இவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி உஷாராணி(41), மகன்கள் விஷ்வா (14), வினித் (12) ஆகியோர் கடந்த சில நாட்களாக வேப்பங்குளத்தில் உள்ளனர். முத்து பாண்டியன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இன்று காலை அவரது வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், முத்து பாண்டியனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், தென்காசி டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், சாம்பவர் வடகரை காவல் ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்திற்கு தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. பின்னர் உடலை கைப்பற்றிய காவலர்கள், தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? பணப் பிரச்னையா? என பல கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது.

Tasmac supervisor muder
Tasmac supervisor muder
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.