ETV Bharat / state

"அதிமுகவினருக்கு சிறுபான்மையினரின் வாக்கு கிடையாது" - மனிதநேய மக்கள் கட்சி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 1:58 PM IST

Manithaneya Makkal Katchi no alliance with AIADMK: பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியே வந்தாலும் இனி வரும் காலங்களில் அதிமுகவினருக்கு சிறுபான்மையினரின் வாக்கு கிடைக்க வாய்ப்பில்லை என மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் அப்துல் சமது தெரிவித்துள்ளார்.

Manithaneya Makkal Katchi no alliance with ADMK
அதிமுகவினருக்குச் சிறுபான்மையினரின் வாக்கு கிடையாது - மனிதநேய மக்கள் கட்சி திட்டவட்டம்

அதிமுகவினருக்குச் சிறுபான்மையினரின் வாக்கு கிடையாது - மனிதநேய மக்கள் கட்சி திட்டவட்டம்

தென்காசி: கடையநல்லூர் அருகே உள்ள புளியங்குடியில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது 49 சிறைவாசிகளை விடுதலை செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28ஆம் தேதி ஆளுநரைக் கண்டித்து, தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "காவிரி நதிநீர் பிரச்னையில் இரண்டு கட்சிகளுமே முழுவதுமாக பிரச்னையைத் தீர்க்கவில்லை. ஆனால், தற்போது தமிழக முதலமைச்சர் காவிரி நதிநீர் பிரச்னையை முழுமையாகத் தீர்க்க வேண்டும். அதற்கு மனிதநேய மக்கள் கட்சி துணை நிற்கும்" என்று அவர் உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புளியங்குடி பகுதியில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஏராளமான கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர். ஆனால், மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் பிரசவ காலங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதை சரி செய்ய வேண்டும்" என கூறினார்.

மேலும், "இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டார சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும். இதுமட்டுமல்லாது இந்த புளியங்குடியைச் சுற்றிலும் சுமார் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளதால், புளியங்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்னையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும்.

மேலும், மகப்பேறு காலங்களில் பெண்கள், உரிய மருத்துவர்கள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். ஆகவே, இதை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு புளியங்குடி அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்த வேண்டும்" எனவும் அவர் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்ச்சியாக பேசிய அவர், "தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது வரவேற்கத்தக்கது. இருப்பினும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக அதிமுக வாக்குகள் அளித்தது. அவர்கள் வாக்கு அளிக்காவிட்டால், குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேறியிருக்காது. சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் எந்த சூழ்நிலையிலும் அதிமுகவினருக்கு சிறுபான்மையினர் வாக்கு கிடைக்கவும், வருங்காலங்களில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவும் வாய்ப்பில்லை.

மேலும், தமிழக சிறைகளில் ஆயுள்தண்டனை கைதிகளாகப் பல ஆண்டுகள் சிறையில் உள்ள 49 சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும், மேலே கூறிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகிற 28ஆம் தேதி தமிழக ஆளுநரைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கிருஷ்ணசாமி கொலை முயற்சி வழக்கு; 19 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான தீர்ப்பு.. மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.