ETV Bharat / state

தென்காசியில் கொலை வழக்கில் வெளிவந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் கைது !

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 6:22 AM IST

தென்காசியில் தொடர் குற்றம் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 குற்றவாளிகளை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யபட்ட குற்றவாளிகள்
கைது செய்யபட்ட குற்றவாளிகள்

தென்காசி: குத்துக்கல்வலசை பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கொடூர கொலை சம்பவத்தில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகள் ஜாமினில் வெளிவந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தென்காசி காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் இருந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில், அந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில் தென்காசி காவல் நிலையத்திற்கு குத்துக்கல்வலசை பகுதியில் இருந்து அம்பிகா என்ற ஒரு பெண்ணிடம் இருந்து ஒரு அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அந்த அழைப்பில், குத்துக்கல்வலசை பகுதியை சேர்ந்த சில நபர்கள் தன் வீட்டிற்கு வந்து கலாட்டா செய்து வருவதாகவும், தன் வீட்டு கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் கொடுத்துள்ளார்.இதனையடுத்து விரைந்து சென்ற,தென்காசி போலீசார் அந்த நபர்களை பிடிக்க முயற்சி செய்தபோது,குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓட முயற்ச்சித்துள்ளனர்.

இதனையடுத்து போலிஸார் அந்த நபர்களை விரட்டி சென்று பிடித்தனர். போலீஸார் நடத்திய விசாரனையில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பதும், இவர்கள்தான் குத்துக்கல்வலசை பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.

பின்னர் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த தென்காசி போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: Tirunelveli Mayor: திருநெல்வேலி மேயர் சரவணன் ராஜினாமா? - மேயர் ஈடிவி பாரத்திற்கு அளித்த விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.