ETV Bharat / state

வாசுதேவநல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக இரட்டைக் கொலை

author img

By

Published : Jan 19, 2023, 10:24 AM IST

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

கொலை
கொலை

தென்காசி: வாசுதேவநல்லூர் தேவ விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் (52). இவருக்கும் அவரது வீட்டிற்கு அருகே வசித்து வரும் செல்லத்துரை (54) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில், செல்லத்துரையின் வீட்டு வாசல் முன்பு ஐயப்பன் எச்சில் துப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த செல்லத்துரை தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஐயப்பனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ஐயப்பன் கீழே விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஜயப்பன் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது மகனான கருப்பசாமி செல்லத்துரையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இதில் செல்லதுரையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குடி போலீசார், உயிரிழந்த ஐயப்பன் மற்றும் செல்லதுரையின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஐயப்பனின் மகனான கருப்பசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து வாசுதேவநல்லூர் பகுதியில் அரங்கேறிய இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளதால் அங்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்பட்டு பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கருமுட்டையை விற்ற மனைவி... தட்டிக்கேட்ட கணவருக்கு கொலை மிரட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.