ETV Bharat / state

தென்காசியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு!

author img

By

Published : Mar 9, 2021, 9:51 PM IST

தென்காசி: மாவட்டத்தில் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் கூட்டாக ஆய்வுமேற்கொண்டனர்.

ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

தென்காசி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்த வகையில் தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம், தென்காசி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை மையமானது கொடிக்குறிச்சி பகுதியில் உள்ள யூஎஸ்பி கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

ஆய்வு

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சமீரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுகுனா சிங் கூட்டாக ஆய்வுமேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

"தற்போது அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையமான ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்தும் வாக்கு இயந்திரங்கள் கொண்டுவருவதற்கு எளிதாகவும், இடவசதியும் முறையாக இருப்பதால் இந்த இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

மேலும் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள், தடுப்புகள் அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வுமேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழைய சட்டப்பேரவைத் தேர்தலின்போது வழக்குகள் அடிப்படையில் 96 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.