ETV Bharat / state

செப்டிக் டேங்கிற்குள் கிடந்த மனித எலும்புக்கூடு.. தென்காசியில் பகீர் சம்பவம்!

author img

By

Published : Jun 5, 2023, 1:42 PM IST

தென்காசி அருகே செப்டிக் டேங்கிற்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து இலத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செப்டிக் டேங்கிற்குள் கிடந்த மனித எலும்புக்கூடு
செப்டிக் டேங்கிற்குள் கிடந்த மனித எலும்புக்கூடு

செப்டிக் டேங்கிற்குள் கிடந்த மனித எலும்புக்கூடு

தென்காசி: செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட இலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்குச் சொந்தமான வீடு ஒன்று இலத்தூர் பகுதியில் உள்ளது. இந்த நிலையில் லட்சுமணன் கடந்த சில வருடங்களாக வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கி வசித்து வந்து உள்ளார். இதன் காரணமாக, இலத்தூர் பகுதியில் உள்ள அவரது வீடானது நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டுக் கிடந்து உள்ளது.

இந்த நிலையில், தற்போது சொந்த ஊருக்கு வருகை தந்து உள்ள லட்சுமணன், தனது வீட்டைப் பராமரிப்புச் செய்து வாடகைக்கு விட முடிவு செய்து வீட்டினை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். அவரது வீட்டிலிருந்த செப்டிக் டேங்கை சுத்தம் செய்து உள்ளார். அப்போது, செப்டிக் டேங்கிற்குள் மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்து உள்ளது.

அதைப் பார்த்த வேலை ஆட்கள் மற்றும் லட்சுமணன் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். பின் உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து இலத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்து உள்ளனர். தகவலின் பேரில், விரைந்து வந்த இலத்தூர் காவல்துறை போலீசார் செப்டிக் டேங்கில் கிடந்த எலும்புக் கூட்டை மீட்டு உள்ளனர். பின் உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக இலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் குமார் என்பவர் அளித்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு, இலத்தூர் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது செப்டிக் டேங்கிற்குள் எலும்புக் கூடாகக் கிடந்த நபர் ஆணா? பெண்ணா? கொலை செய்யப்பட்டு செப்டிக் டேங்கிற்குள் புதைக்கப்பட்டாரா? அல்லது தவறி விழுந்து விட்டாரா?.

மேலும் இறந்து எவ்வளவு நாட்கள் இருக்கும்? அந்தப் பகுதியில் ஏதேனும் நபர்கள் காணாமல் போய் உள்ளனரா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசிக்கு மிக அருகே உள்ள ஒரு கிராமப் பகுதியில் செப்டிக் டேங்கிற்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Gokulraj murder case: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை: உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.