சிவகங்கை: அரண்மனை வாசல் முன்பாக இந்திய குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படம் பொருந்திய அலங்கார ஊர்தி செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் ஜனவரி 26ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் சார்பில் அனுப்பப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார், வ.உ. சிதம்பரம்பிள்ளை, பாரதியார் உள்ளிட்டவர்களைக் கொண்ட அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்காததைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கண்ணகி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: Aparna Yadav Exclusive: பாஜகவில் இணைந்தது ஏன்? அபர்ணா யாதவ் பிரத்யேகப் பேட்டி!