ETV Bharat / state

சேலத்தில் ஏரியில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலி!

author img

By

Published : Aug 19, 2020, 6:19 PM IST

சேலம் : எடப்பாடி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Two children drowned lake and dead in salem
Two children drowned lake and dead in salem

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகில் உள்ள ராக்கியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மகன் சந்தோஷ் (வயது 12). இவர், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். அதேபோல், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பொன்னையாறு பகுதியைச் சேர்ந்த செந்திலின் மகன் தியானிஷ் (வயது 12), சேலம் மரவனேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது பள்ளிகள் செயல்படாத நிலையில் தியானிஷ், ராக்கியம்பட்டியில் உள்ள தனது பாட்டி செல்லம்மாளின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், சந்தோஷ், தியானிஷ் இருவரும் இணைந்து மோரிவளவு பகுதியில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத வகையில் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்த இருவரும் நீரில் மூழ்கினர்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு கொங்கணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களது உடல்கள் உடற்கூறாய்வுக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கொங்கணாபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.